இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
79
அன்பு மாலை
ஆழியென ஆழத்தைக் காணலரும் ஞானி;
ஆதாரம் ஆறினையும் கடந்துணரும் யோகி;
குழுமகங் காரமெனும் பேயினையே அடக்கித்
தூயனென நிலவுகின்ற மந்திரத்தைக் கற்றோன்;
வாழும்வகை இதுவென்ன வகுக்கின்ற குரவன்;
மாயையெனும் பாம்பின்விடம் போக்குகின்ற அமுதன்;
தாழுமவர்க் கருள்புரியும் தண்மைஒளிர் கண்ணான்; .
சால்புடைய ராம்சுரத் குமார்யோகி வாழி!
216