பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

69


இதுதான் மானிடனின் இயல்பு; தன்னலம் மிக்க மானிடனின் பண்பு. அன்பை அறியாதவனின் குணம். கடவுள் அன்பின் பெருமையை - மாட்சியைப் பற்றி எப்படியெல்லாம் பேசப்படுகிறது கேட்டீர்களா?

அன்பைப் பற்றிப் பேசப்படும் பேச்சா இது? இல்லவே இல்லை! அமைதியில் துன்புறுவது அன்பு! மெய்ம்மை வகையில் வாயடங்கி வருந்துவது அன்பு! அன்பு, கேட்ட கேள்விக்கெல்லாம் விடையளிக்காது. மொழியில் விடை பகராதது அன்பு! அன்பின் விளக்கம் சொல்லில் வெளிப்படாது.

எதையும் தாங்கி இடர்உறா வாழ்வின்
விதையாய்ப் புதையலாய் விளங்குவது அன்பே.

அன்பு தணிந்து போகும்

த்தேயு 24:12, "கொடுமை மிகுதியாவதனால், பலருடைய அன்பு தணிந்து போகும்"

கிரேக்கச் சொல்லான (Agapa) என்பதன் பொருள்பட, மெய்யான அன்பு, பேரன்பு என்னும் பொருளில் மேற்சொன்ன மத்தேயு நற்செய்தி 24:12ல் மட்டும் ஒரே ஒருமுறை கையாளுகிறார் மத்தேயு அவர்கள். திருச்சபையில் சமயத் தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வதும் அன்பினை மீறுவதும் ஒன்றேதான்.

அன்பென்னும் அருள் உலகத்தை விட்டு புலன் உணர்வு எனும் உலகத்திற்குக் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் மானிடர். "அன்பினைப் பற்றிச் சொல்லப்படுகின்ற முறையில் - நெறியில் நாம் சென்றிட முடியாது; அப்படிப் பட்ட விதிமுறை களைக் கடைப்பிடித்தல் என்பது முடியாத ஒன்று” என்று சொல்வது சரியாகாது. அன்பின் உலகிலிருந்து, சூழலிலிருந்து திருச்சபை விலகுமேயானால் அதன் இடத்தில் சாத்தான் வந்து அமர்ந்துவிடும்; ஆதிக்கம் செலுத்தும். அன்பின் அரவணைப்பிலிருந்து விடுபடும் எவரும் மறுகணமே சாத்தானின் வல்லாண்மைக்கு ஆளாக நேரிடும்.

அன்பினை விட்டகன்றால் அந்தோ மிகுதுயர்
துன்பினைக் கொண்டிடும் வாழ்வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/73&oldid=1515480" இலிருந்து மீள்விக்கப்பட்டது