பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அன்பு வெள்ளம்


உங்கள் வீட்டில் இருப்பவர்களிடையே அன்புள்ளம் கொண்டிரானால் இல்லத்தரசிகளே! உங்கள் உள்ளத்தில-இல்லத்தில் இயேசு கிறித்து வந்துறைகிறார். இல்லத் தலைவர்களே! அன்புள்ளம் கொண்டீர்களேயானால் உங்கள் அன்பு உள்ளங்களில் - இல்லங் களில் இயேசு பெருமான் வந்து வாழ்வார். உங்களின் அன்பு நிறைந்த வாழ்க்கையில் குடும்பத்தில் எந்தச் சிக்கல்களும் - பாடுகளும் தோன்றா அமைதி நிலவும்.

1 யோவான் 4 : 1இல் சொல்லப்பட்டுள்ள உரையில் ஒவ்வொருவரின் நெஞ்சக் குரலுக்கும் ஒவ்வொரு சிக்கலுக்கும் சரியான விடை பொதிந்து உள்ளது என்பது என் நம்பிக்கை. இதோ அந்த உரை 'கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து பற்றுறுதிக் கொண்டிருக்கிறோம். கடவுள் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் கடவுளில் நிலைத் திருக்கிறான் கடவுளும் அவனில் நிலைத்திருக்கிறார்'

மேலே சொன்னபடியே, நாம் அன்பை விரும்பியிருக்கிறோம். அன்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த அன்பு என்றுமே தோல்வியுறாது என்றும் நாம் நம்பியிருக்கிறோம்.

ஒவ்வொன்றும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. எடுத்துக்காட்டாக நம் மானுடத்தின் அறிவு தோல்வியுற்றிருக்கிறது. நம் மானுடத்தின் திறன் தோல்வி கண்டிருக்கிறது.

நம்முடைய வாழ்க்கையை ஓட்டாண்டியாக விட்டோம். பொருளற்று நொடித்த நிலைக்குத் தள்ளிவிட்டோம். நொடிந்து போகச் செய்து விட்டோம். காரணம் என்ன? வாழ்க்கையில் அன்பினை இட்டு நிரப்பத் தவறிவிட்டோம். அதனால் பொருளற்ற நிலையினைச் சரிப்படுத்தும் பொறுப்பினை அன்பினிடமே விடப் படல் வேண்டும்.

அறிவராய்ச்சித் திறனின் தோல்வி

லகோரே! நீங்கள் அறிவுக்குட்பட்ட வழியிலேதான் மீட்பினைக் கொண்டு வந்திட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஒருகாலும் முடியாது. உங்கள் அறிவு தோற்றுவிட்டது. நீங்கள் தோற்றும் போனிர்கள். உங்கள் பழைய மானிட அன்பும் தோல்வி கண்டுவிட்டது.

உங்களுடைய கல்வி, பயிற்சி, ஆய்வு இன்ன பிற எல்லாம் உங்களை வெற்றி பெற்றிடச் செய்ய இயலாதன ஆயின. உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/84&oldid=1515485" இலிருந்து மீள்விக்கப்பட்டது