பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

141

தோழி “தலைவியைக் கடாததற்குக் காரணம் தோழியே” என்று பொய் கூறித் தலைவியின் துன்பத்தை ஆற்றுமாறு தலைவனிடம் கூறினாள்.

469. பகற்குறியில் வரச் செய்வோம்

ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்,
உலகம் புரப்பான் போல்வது ஒர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஒர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு,
என்னைச் சொல்லும் சொல், கேட்டி-சுடரிழாய் பல் மானும்:

நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின்
அன்னான்சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது.ஆயின்,
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ நறுநுதால்

அறியான் நீ வருந்துவல் யான் என்னும் அவன்.ஆயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது.ஆயின்,
அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?

‘வாழலேன், யான் என்னும் ‘நீ நீப்பின் அவன்.ஆயின்,

‘ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி.ஆயின்
சூழுங்கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்
சூழுங்கால், நறுநுதால் நம்முளே சூழ்குவம்.
அவனை,
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது;
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன்,
வெளவினன் முயங்கும் மாத்திரம் வா எனக்
கூறுவென் போலக் காட்டி,
மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே - கலி 47

விளங்கும் அணிமணி அணிந்தவளே! ஒரு தலைவன் என்னிடம் ஒன்றை இரந்து நிற்பவனைப் போல் எளிமையை மேற்கொண்டவனாய்ச் சில சொற்களைச் சொல்வான்.