பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

143

இதற்கு நான் கூறுவது ஒன்று இல்லை என்று தோழி தலைவிக்குச் சொன்னாள் பின்பு அவள் தன் நெஞ்சுடன் குறியிடத்து வா என்று கூறுபவளைப் போல் தலைவனுக்கு ஒரு பொய்க் குறியைக் காட்டி அவன் சென்ற வழியிலேயே நெஞ்சே நீ செல்வாயாக, என்று சொன்னாள், தலைவி

470. மணந்து கொள்ளல் வேண்டும்

ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போல,
தே மூசு நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த,
வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகப்
படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய
கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும்
பெருங் களிற்றினத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் வாட!
வீழ்பெயற் கங்குலின் விளி ஒர்த்த ஒடுக்கத்தால்,
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ
தாழ் செறி கடங் காப்பின் தாய் முன்னர், நின் சாரல்
ஊழ் உறு கோடல் போல, எல் வளை உகுபவால்?

இணைஇருள் இது என் ஏங்கி, நின் வரல் நசைஇ,
நினைதுயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ
'இனையள் என்று எடுத்து அரற்றும்
அயல் முன்னர், நின்சுனைக்
கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்?

பல் நாளும் படர் அட, பசலையால் உணப்பட்டாள்,
பொன் உரை மணி அன்ன, மாமைக்கண் பழி உண்டோ
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை
மின் உகு தளிர் அன்ன, மெலிவு வந்து உரைப்பதால்?
என ஆங்கு
பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு என் நீவிப்
பூங் கண் படுதலும் அஞ்சுவல்; தாங்கிய
அருந் துயர் அவலம் தூக்கின்,
மருங்கு அறிவாரா மரையினும் பெரிதே. - கலி 48