பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

உடையவள் அல்லை! உன்னை இப் பக்கத்தில் வரும்படி விட்ட உறவினரும் குற்றம் உடையவர் அல்லர் குற்றம் உடையவர் யார் என்றால், மதம் கொண்ட கொல்லும் தன்மை யுடைய யானையை நீர்க்குப் பறையை அறைந்து செல்லும் படி விடுவது போல் பறையறைந்து செல்வதல்லது பறை சாற்றாது செல வேண்டா என்று ஆணையிடாத அரசனே குற்றவாளி ஆவான்!” என்றான் தலைவன்

479. அறிவைக் கவர்ந்து சென்றாள்

வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்
மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப,
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஒட,
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தோடு இகத்தந்தாய் கேள், இனி:

பூந் தண் தார், புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல்
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்
ஏந்துகோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்,
சேந்து நீ இனையையால், ஒத்ததோ? சின்மொழி:

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்,
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன் தலை,
பணைஅமைபாய்மான் தேர் அவன்செற்றார் நிறம்பாய்ந்த
கணையினும் நோய்செய்தல் கடப்பு:அன்றோ? கணங்குழாய்!

வகை அமைதண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன கணங்கினாய்!
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ? காழ் கொண்ட இள முலை.
என ஆங்கு

இணையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி,
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்
மனை ஆங்குப் பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே.
- கவி 57