பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

காட்டில் ஒளியுடைய செங்காந்தள் மலர்ந்திருக்கும் அவ் இடத்தில் குளிர்ந்த பல அருவிகள் பாயும் சுனையின் ஒரு பக்கத்தில் இடியேறு சினந்து தாக்கியதால் வலிமை அழிந்த பாம்பினது அழகிய தலை மணியான விளக்கின் ஒளியில் தலைவியின் இருண்ட மெல்லிய கூந்தலின் இன்பம் அடையும் உறக்கத்தை நீ அடைவாயாக” என்று இரவில் தலைவியிடம் வந்து செல்லும் தலைவனுக்குத் தோழி மணம் வேண்டினாள்


397. தாய் வெறியாட்டு நிகழ்த்துகிறாள்

பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னாஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்
அறிந்தனள் அல்லள், அன்னை வார்கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து
ஒவத்தன்ன வினை புனை நல் இல்
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்
என் ஆம்கொல்லோ ? - தோழி! - மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின், இம் மறை
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று