பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

305


"கருமை நெய்ப்பு ஆகியவற்றை உடைய கூந்தலையும் மடப்பமுடைய மொழியையும் உடையவளே, பெறுவதற்கு அரிய ஆதிரை நாளை உடைய சிவபெருமான் திருமேனிஅழகை அடையுமாறு மலர்ந்த பெரிய இந்தச் சண்பகம் பருவம் பொய்க்காதது போல அவர்தம் கூறிய பருவத்தைப் பொய்க்காமல் வருவார் என்பதை அவர் சொல்லால் நானும் நீயும் தெளிந்தோம் அப்பருவம் கழிவதற்கு முன் அவர் வருவார். அவர் மொழியை உண்மை எனத் தெளிவாயாக’ என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள்