பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை

- આ જ સ્વ જ શ ષ સ હ ઃ - શ્વ હતા જ જ ત્ય ત્યા હતા જ .مسمسمسحسنتيكية-جيجزيكم مسمسم . . . . . . . . . . . . . . . . . .

99. வருந்துகின்ற நெஞ்சே! நோம், என் நெஞ்சே நோம், என் நெஞ்சே, இமை தீய்ப்பன்ன கண்ணிர் தாங்கி, அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.

- காமஞ்சேர்குளத்தார் குறு 4 “எனது நெஞ்சம் வருந்தி நிற்கிறது; எனது நெஞ்சம் மிகவும் வருந்துகிறது. ஏனெனில் இமைகளைத் தீய்கின்ற வெம்மையை உடைய எனது கண்ணிரைத் துடைத்து அரவணைக்கின்ற தலைவர் இப்பொழுது பிரிந்திருப்பதால், எனது நெஞ்சம் வருந்துகின்றது," என்று தோழியிடம் தலைவி கூறினாள்.

100. காம நோயின் கொடுமை

அதுகொல், தோழி! காம நோயே? - வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை, உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர், மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.

- நரிவெரூஉத்தலையார் குறு 5 "தோழி! தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்கு வதற்குக் காரணமாகிய இனிய நிழலையுடைய புன்னை