பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ 8३

ஒரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், நக்கு விளையாடலும் கடிந்தன்று, ஐதே கம்ம, மெய்தோய் நட்பே - அம்மூவன் குறு 400 “அரும்பினது அழகிய மலரைக் கலந்து நெய்தலாகிய நெடிய மாலையை அணிந்த நீர் ஒழுகிய கூந்தலை உடைய விளையாட்டு மகளிருக்கு அஞ்சி, ஈரத்தை உடைய நண்டு கடலுக்குள் ஒடும் துறையை உடைய தலைவனோடு ஒரு நாள் நகைத்து விளையாடிய அவனுடைய மெய்யைத் தோய்ந்த நட்பானது நீங்கியது; இது வியத்தற்குரியது." என்று தலைவி தனக்குள்ளே உவந்துரைத்தாள்.

&