பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் ; 199

வாய் இன்பம் உண்டாகத் துயில்வோம் இவ்வாறு இரு வகையிலும் இன்பம் உண்டாகும் செயலைச் செய்திலர் என்பதற்கே வருந்துகிறேன் பிரி வாற்றாது வருந்துவேன் அல்லேன்” என்று தோழிக்குப் பொறுத்திருப்போர் எனத் தலைவி கூறினாள்

303. தேடும் பொருட்குக் குறை ஒழிக! தென் கடற் பிறந்த முத்தின் ஆரமும், முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத் தெறல் அரு மரபின் கடவுட் பேணி, குறவர் தந்த சந்தின் ஆரமும், இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும், திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் - குழியில் கொண்ட மராஅ யானை மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது, வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும், வள் வாய் அம்பின், கோடைப் பொருநன் - பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின், விழுமிது நிகழ்வது ஆயினும் - தெற்கு ஏர்பு, கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து, சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட மாசு இல் து மடி விரிந்த சேக்கை, கவவு இன்புறாமைக் கழிக - வள வயல் அழல் நுதி அன்ன தோகை ஈன்ற கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல் நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர, புலம்பொடு வந்த பொழுது கொள் வடை, இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த வெண்குருகு நரல, வீசும் நுண் பல் துவலைய தண் பனி நாளே!

- பெருந்தலைச் சாத்தன்ாா அக 13 தனது தென் கடலில் பிறந்த முத்தாகிய ஆரமும், பகைவர் திறைப் பொருளாகக் கொடுக்கும் வலினிமயுடைய