பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

343. நெஞ்சே வா மாயோனை முயங்குவோம் கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும், கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து, ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும் செயல் அருஞ் செய்வினை முற்றிலம் ஆயின்; அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின் வழுதி கூடல் நாள் அங்காடி நாறும் நறு நுதல் நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு வரை குயின்றன்ன வான் தோய நெடு நகர், நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப, முயங்குகம் சென்மோ - நெஞ்சே - வரி நுதல் வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து, மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை தெண் நீர் உயர் கரைக் குவைஇய தண் ஆன்பொருநை மணலினும் பலவே.

- கணக்காயனார் மகனார் நக்கீரனார் அக 93 “நம் உறவினரைத் துன்பம் போக்கித் தாங்கிடவும் மேலும் சுற்றத்தார் பெருகவும் உறவினர் அல்லாதவர், உறவினர் போல் பொருந்தியிருக்கவும் காரணமான முயற் சிக்குப் பொருந்திய ஊக்கத்தினோடும் கூடிய விருப்பினால் சிறந்து, ஆத்தி மாலை அணிந்து பகைவரைக் கொல்லுகின்ற போரையுடைய சோழரின் அறம் பொருந்திய நல்ல அவை யுடைய உறையூரைப் போன்ற பெறுவதற்கு அரிய அணி கலன்களை அடைந்து, எல்லாரும் விரும்பும் செய்வதற்கு அரிய பொருள் ஈட்டும் தொழிலைச் செய்து முடித்தோம்