பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 187

எல்லாம் முற்றுப்பெறுவது உண்டோ இல்லை என்றாள் வாயில் மறுத்துப் பின் ஒருவாறு ஏற்ற தலைவி தோழியிடம்.

225. கனவில் பெற்ற செல்வம்

பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர் செது மொழி சீத்த செவி செறு ஆக, முது மொழி நீரா, புலன் நா உழவர் புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ், புனல் ஊர! ‘ஊரன் மன் உரன் அல்லன், நமக்கு என்ன, உடன் வாளாது ஒர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேராகி களையாநின் குறிவந்து, எம்கதவம் சேர்ந்து அசைத்த கை வளையின்வாய் விடல் மாலை மகளிரை நோவேமோகேள் அலன், நமக்கு அவன் குறுகன்மின் என, மற்று எம் தோளோடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்? ‘ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து அவர்வயின் மால்தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்தசொல்நோவேமோ

வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?

சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன் தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோஒலி கொண்ட கம்மையான் மண மனை குறித்து, எம் இல் ‘பொலிக எனப் புகுந்த நின் புலையனைக் கண்டாயாம்? என ஆங்குநனவினான் வேறாகும் வேளா முயக்கம்மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட, ‘இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு கனவினான் எய்திய செல்வத்து அனையதே - ஐய எமக்கு நின் மார்பு - கலி 68 இம் மண்ணுலகம் மற்றவர்க்கும் பொதுவானது என்னும் மொழி இன்றி உலகம் முழுவதையும் தானே ஆளும் பேரரசர்க்கு அறிவாகிய சொல்லைச் சொல்வதை இயல்பாகக்