பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


230. ப்ெர்ய்க்கு கைகெர்டோம் அகன் துன்ற அணி பெற, புதலொடு தாழ்ந்த பகன்றைப் பூ உற.நீண்ட பாசடைத் தாமரை, கண் பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தான். தண்கமழ் நறுந்தேறல் உண்பவள் முகம் போல, வண் பிணிதளை விடுஉம் வயல் அணி நல் ஊர! நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல்வழி, ‘தீது இலேன் யான் எனத் தேற்றிய வருதிமன்ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து, இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்? கனற்றி நீ செய்வது கடிந்தீவர் இல்வழி, மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதிமன்அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்? என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி, முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன்நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள, கரையிடைக் கிழிந்த நின்காழகம் வந்து உரையாக்கால்? என ஆங்கு மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் தண்டாப்பரத்தை தலைக்கொள்ள, நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி; மற்று யாம்எனின் தோலாமோ, நின் பொய் மருண்டு a73: { அகலமான நீர் அருந்தும் துறை. அஃது அழகுடைய தாகும்படி சிறு புதருடன் பொருந்தித் தாழ்ந்து கிடக்கும் பகன்றையின் பூவைச் சேரும்படி வளர்ந்த பசிய இலையை யுடைய தாமரை அரும்பு. அது கண்குத்திக் கூசும்படி செய்யு மாறு ஒளிவிட்ட் வெள்ளிக்கிண்ணித்தால் குளிர்ந்த கள்ளை உண்பவள்'முகம் போல் தள்ை அவிழும். இத்தகைய வயல் உடைய நல்ல ஊரன்ே:

நீ நீங்கிச் செல்வதால் கழ்லும் தொடியுடைய பரத்தை யரின் முலையிடையில் தாதுகள் உதிர்ந்து இதழ்கள் அழ.