பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

237


மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி, நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை, தார் மணி பூண்ட தமனிய மேகலை, நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ காதலித்த ஊர்ந்த நின் காமக் குதிரையை, ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள், ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை, வாதுவன்; வாழிய நீ.

சேகா சுதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட மதுரைப் பெரு முற்றம் போல், நின் மெய்க்கண் குதிரையோ, வீறியது. கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே கோரமே வாழி! - குதிரை. வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக் குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண் குதிரையோ, கவ்வியது. சீத்தை பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே, வியமமே - வாழி! - குதிரை. மிக நன்று இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை, பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட பருமக் குதிரையோ அன்று; பெரும! நின் ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர் வாதத்தான் வந்த வளிக் குதிரை ஆதி உரு அழிக்கும் அக் குதிரை, ஊரல், நீ ஊரின், பரத்தை பரியாக வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த் திரி குதிரை ஏறிய செல். - கலி 96 “சிறந்த அழகையுடைய மார்பனே! உன் வாய்ச்சொல் உனக்கு எதிர் அன்று. உன் தன்மையைக் கண்டு வினவு கின்றேன். நீ மடி விரிந்து கரையற்றுக் கசங்கிய ஆடையை உடைய அமையாத வலியை உடையாய். சந்தனம் அழிவ