பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அபிராமி அந்தாதி



விரவும் புதுமலர் இட்டுநின்
பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்
லார்இமை யோர்எவரும்
பரவும் பதமும் அயிரா
வதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக்
காவும் உடையவரே.

(உரை) அபிராமியே, நின்றன் திருவடியாகிய மணமுடைய தாமரை மலர்க்கண் பல வகையாக விரவிய அன்றலர்ந்த மலர்களை அருச்சித்து. இரவும் பகலும் அவற்றை வழிபடும் சக்தி உடையவர்கள், தேவர்கள் யாவரும் பரவும் பதவியையும் ஐராவதத்தையும் ஆகாச கங்கையையும் வலிமையையும் வச்சிராயுதத்தையும் கற்பகச் சோலையையும் உடைய இந்திரர் ஆவர்.

பதம்-தேவலோகத்தை ஆட்சி புரியும் இந்திர பதவி, 74, 75-ஆம் பாடல்களைப் பார்க்க.

83

உடையாளை ஒல்குசெம் பட்டுடை
யாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடை
யாளைத் தயங்கும்நுண்ணூல்
இடையாளை எங்கள்பெம் மானிடை
யாளைஇங் கென்னைஇனிப்
படையாளை உங்களை யும்படை
யாவண்ணம் பார்த்திருமே.

(உரை) நம்மவரே, எல்லாவற்றையும் உடையவளாகிய பரமேசுவரியை, திருவிடையில் துவளுகின்ற செம்பட்டாகிய உடையை உடையவளை, விளங்குகின்ற பிறையை அணிந்த சிவந்த சடையை உடையவளை, வஞ்சகர் நெஞ்சினிடத்தே