பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அபிராமி அந்தாதி

காலால் வலம் வந்து கண்ணால் தரிசித்துக் காயத்தினால் ஆகும் வழிபாடுகளைச் செய்யலாம். ஆனால் இவற்றிற்கெல்லாம் இறுதியில் இருப்பது எம்பெருமாட்டியின் சரணாரவிந்தங்களில் நம் தலையைத் தாழ்த்தி வணங்குவதுதான்.

கையால் கும்பிடுவதும் தலையால் வணங்குவதும். வழிபாட்டு வகைகளே. ஆனால் சாஷ்டாங்கமாக, தண்டாகாரமாக: அடியில் வீழ்வதுதான் சரணாகதி, உயிரற்ற தடி நிறுத்தினால் கீழே விழுந்துவிடும். அது போலக் கருத்திருத்துவ மனோபாவத்தை, அடியோடு ஒழித்து, உன் சரணல்லால் சரணில்லை என்று அடைக்கலம் புகுவதையே அந்த நிலை காட்டுகிறது. பொதுநூல் கூறவந்த திருவள்ளுவர், தலையைப படைதத இறைவன் தாளில் விழுந்து வணங்குவதுதான என்பதை எதிர்மறை முகத்தால் கூறியிருக்கிறார்.

"கோளில் பொறியி குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"

என்பது திருக்குறள்.

ஆகையால் அன்னையின் திருவடித் தாமரையை வணங்குவதே காயத்தால் பெற்றபயன். இதை ஆசிரியர் சொல்கிறார்.

என்றும் வணங்குவது உன் மலர்த்தாள்

மூன்று கரணங்களில் மனத்தையும். உடம்பையும். சொன்னார். ஆனால் வாக்காகிய கரணத்தினால் செய்யும் வழிபாட்டை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆயினும் அதனையும் செய்பவர் இவ்வாசிரியர் என்பதை நிம் உணர வழி உண்டு. இந்தப் பாடல்களைப் பாடியிருப்தே, வாக்கினால் செய்த தொண்டு அல்லவா?