பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்த புண்ணியம்

அம்பிகையின் திருவருளால் அதுபூதி பெற்ற அபிராமி பட்டர் தம் மனோவாக்குக் காயங்களால் அன்னையை நினைப்பதும் வாழ்த்துவதும் பணிவதுமாகிய செயல்களை இடைவிடாது செய்து வருகிறவர். அப் போது மனத்தில் எதை எண்ணினாலும் அது தேவியின் தொடர் புடையதாகவே அமைகிறது. அவளுடைய புகழ் எல்லையில்லாதது; கடல்போலப் பரந்தது; நம் அறிவினால் அளக்க முடியாதது. ஆனால் அந்தப் புகழ்த் கடலின் அலைகளினூடே நம் உள்ளமெனும் ஒடம் மிதக் கலாம். மெல்லிய அலை மோத, மனம் அந்த அலையின் அசைவுக்கு ஏற்ப அசைய, அதுவே தாலாட்டாக நாம் நம்மை மறந்து தூங்கலாம். இந்த நிலை வரவேண்டு மானால் மனம் தன் போக்குப்படி போகக்கூடாது. அது அம்மையின் புகழலையிலே அசையவேண்டும்; அவள் புகழ்க்கடலில் உலவவேண்டும். - -

இத்தகைய அநுபவம் இவ்வாசிரியருக்குக் கிடைத்தது. ஆனால் அது எளிதில் கிடைத்ததா? எப்போதும் அன்னை யின் பிரபாவத்தில் உள்ளம் மிதப்பது என்பது கில் நாட்களில் வருவது அன்று. எத்தனையோ காலம் முயன்று முயன்று அது வரவேண்டும். பல படிகள் கடந்து அந்த உயர் நிலையை அடையவேண்டும். •

இந்த நிலையை அடைந்தவர். இதற்கு முன் என்ன என்ன படிகளைத் தாண்டி வரவேண்டியிருந்தது என்பதை நினைப்பூட்டிக்கொள்கிறார். - - -

எழில்-8