பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்த புண்ணியம் 115

தோன்றும் முறை இப்போது நேர்மாறாக, கடைசியி லிருந்து முதல் வரையில் எண்ணுவதாக இருக்கும்.

அபிராமியின் புகழை எப்போதும் எண்ணி வாழும் நிலைக்கு வந்த அபிராமி பட்டருக்குத் தாம் வந்த வழி இப்போது தலைகீழாக நினைவுக்கு வருகிறது. எல்லா இவற்றையும் நினைந்த பிறகு வியப்பு மீதுர்கிறது.

கண்ணியது உன் புகழ்.

அபிராமியின் புகழையே அவர் எப்போதும் எண்ணிய வண்ணம் இருக்கிறார். உலகியற் பொருள்களையும் மனிதர்களின் புகழையும் நம்முடைய பெருமையையும் எண்ணி எண்ணிக் காலங்கழிக்கும் நமக்கும் இந்த நிலைக் கும் நெடுந்துாரம். யாராவது திடீரென்று அடித்தால், ஐயோ!' என்று அலறுவோமே ஒழிய, அம்பிகே என்று சொல்ல வராது.

தண்ணிர் நிரம்பிய ரப்பர்க் குழாயை ஊசியால் குத் தினால் தண்ணிர் அந்தத் துளை வழியே வேகமாக வரும். ஒன்றும் இல்லாத குழாயைக் குத்தினால் வெறும் காற்றுத் தான் வரும். நம் உள்ளத்தில் அமுத்தமாக அன்னையின் நினைவு இல்லை. இருந்தால் எந்தக் கணத்திலும் அது தான் வெளியாகும்.

வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால்

மற்று நான்அறியேன்மறு மாற்றம்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகிறார். அவர் உள்ளம் முழுவதும் இறைவனுடைய நினைவே நிரம்பியிருந்தது.

அன்னையின் புகழை எப்போதும் எண்ணியிருக்க வேண்டுமானால், அதற்குமுன் பல பயிற்சிகளைச் செய் திருக்கவேண்டும். பல படிகளைக் கடந்த பிறகே இந்த நிலை கிடைத்திருக்கிறது. இவ்வாறு நின் புகழையே எண்ணுவது எளிதில் வந்துவிடுகிற காரியமா? இதற்கு