பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்ய புண்ணியம் - 119.

தனி மனிதன் தன் உள்ளத்தை நல்வழியிற் செல்லும் படி செய்வது, பல முறை முயற்சி செய்தபின் விளையும் விளைவு. பல பெரியோர்களுடன் சேர்ந்து நல்ல பழக்கங்' களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அன்பர்களின் கூட்டத்திலே கலந்து கொண்டால் நம்மை அறியாமலே அவர்களுடைய பழக்கவழக்கங்கள் நம்மிடத்திலும் உண்டாகும். அறிவினால் ஆராயாமலே அந்தப் பழக்கங் கள் மெல்ல மெல்ல நமக்கும் வரும். தனியாக இருப்பவ்ன் அத்தகைய நல்ல பழக்கத்தை மேற்கொள்ள நினைத்தால் சோம்பல் முன் வந்து தடுக்கும்; அறிவு அதைச் செய்யாமல் இருப்பதற்குரிய சமாதானங்களைத் தேடும். ஆன்ால் சத்சங்கத்தில் சேர்ந்துவிட்டால் நல்ல பழக்கம் த்ர்ன்ே அவனைச் சாரும், எந்தப் பழக்கமும்-தீயதானாலும் நல்ல தானாலும்-சங்கத்தினால் எளிதிலே படிந்துவிடும்.

பக்தி பண்ணுவதும் அம்பிகையை வணங்குவதும் நர்மாக முயன்று பழகிக்கொள்ள முயன்றால் அமைவது அருமை. தொண்டர்களோடு கூடு நின்றால் அவை நம்மிடம் சார்ந்து படிந்து விடும். நிலத்தின் இயல்பினால் நீருக்கு நிறமும் சுவையும் வருவதுபோல, சார்ந்த இனித் தின் இயல்பினால் நமக்கு, அவர்களின் பழக்கங்கள் உண்டாகும். , , , r , , , , " . . . *

இறைவியைத் தொழும் பழக்கம் வருவதற்குமுன், தொழுது வாழ்த்தித் தியானிப்பவர்கள் கூட்டத்தில் கலந்து பழகவேண்டும். அந்தச் சத்சங்கச் சிறப்பினால் மெல்ல மெல்லப் பக்தி உணர்ச்சி உண்டாகும், தென்ன மரத்தில் இளநீர்க் காய்க்குள் நீர் நிரம்புவதுபோல, நம்மை அறியாமல் உள்ளம் பண்படும்; பக்தியுணர்வு படியும். இந்த நிலை அரும்பு போன்றது. -

அரும்பு மலாந்து பூவாகி பூ முதிர்ந்து காயாகி, அது கனிந்து கனியாகிறது. சத்சங்கத்தில் ஈடுபடப்பட

W