150 அபிராமி அந்தாதி
அம்பிகையின் தண்ணளியைப் பெறுபவர்கள் இந்த உலகத்திலே நல்வாழ்வு பெறுவர் என்பதை முதலிற். கூறினார். அது நமக்குக் கைமேல் பலனாக வருவது. பிறகு, மற்றவற்றைக் கூறினார்.
தண் அளிக்கென்று முன்னே பல கோடி
தவங்கள் செய்வார்
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி
வானவர்தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி
விடும் அன்றோ?
திருவருளால் எங்கும் நல்வாழ்வு பெறலாம் என்பதை வற்புறுத்துவது நம்முடைய சமயம்.
"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை"
என்று சம்பந்தரும்.
'இம்மை யே தரும் சோறும் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாது மையுற வில்லையே'
என்று சுந்தரரும் அருளியிருக்கிறார்கள்.
s s : *
அம்பிகையின் தண்ணளியினால் வரும் நலங்களைச் சொன்னவர், இந்தக் கருத்தை அபிராமியம்மையை விளித்தே சொன்னார். 'உன்னுடைய தண்ணளியால்
வருவன இல்ை அன்றோ?' என்று வினவுவாரைப் போலச் சொன்னார். அம்பிகையை அவர் அன்போடு விளிக்கிறார்.