பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான வடிவு' 159

என்ன அதிசயமான வடிவு' என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தார். .

அதிசயமான வடிவு உடையாள்.

இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா? அவர் தம் உள்ளத்தடத்திலே வைத்துத் தியானிக்கும் பெருமாட்டி யின் பேரழகிலே சொக்கி நின்று தம்மை மறப்பவர். இப் போது மற்றவர்களுக்கு அந்த அழகைக் கொஞ்சம் சொல் இப் பார்க்கலாம் என்று புகுந்தார். 'அதிசயமான உருவம் படைத்தவள்’’ என்று பீடிகை போட்டுவிட்டார். இனி அதை விரித்துரைக்க வேண்டும். அங்க வருணனை செய்யலாமா என்று யோசித்தார். முதலில் எதைச் சொல்வது? முகத்தைத்தான் சொல்லவேண்டுமென்று எண்ணினார். எப்படிச் சொல்வது?

உலகத்தில் அழகிய முகத்துக்கு உவமை சொல்வ்

தானால் எல்லோருமே தாமரையைச் சொல்லுகிறார்கள்.

அந்த வாய்பாடு அவருக்கு நினைவு வந்தது. "சே! இந்தப்

பழைய உவமையையா சொல்வது?' என்ற எண்ணம்

உடன் வந்தது. இப்படியானால் வேறு எதைச் சொல்

வது?' எண்ணிப் பார்த்தார். ஒன்றுமே தோன்றவில்லை.

உலகத்திலுள்ள தாமரைகள் எல்லாம் சேர்ந்து நின்றாலும் அம்பிகையின் முகத்தாமரைக்கு ஒத்து வருமா? அம்பிகை

யின் திருவுருவ வருணனை செய்யப் புகுந்ததே தவறு

போலும் என்று எண்ணினார் பட்டர்.

தாமரை எங்கே? அம்பிகையின் திருமுக எழில் எங்கே! எத்தனை காலம் தவம் செய்தாலும் இந்த எழில் தாமரைக்கு வருமா?-இப்படி, ஒடிய எண்ணத்தினுாடே ஒரு புதிய கருத்துத் தோன்றியது ஆசிரியருக்கு. உலகத்தி துள்ள தாமரைகள் யாவும் எம்பெருமாட்டியின் திருமுக மலரின் பேரழகைக் கண்டு துதிக்கின்றன என்று ஒரு