பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iss அபிராமி அந்தாதி

மக்கள் முதலில் திருமணம் செய்துகொண்டு அப்பால் இணைவார்கள். இங்கே மாறான முறையில் ஒரு நிகழ்ச்சி, நிகழ்கிறது. முதலில் ஒன்றாக இருந்தவர்கள் பிறகு பாடு பாதியாகத் தோன்றினார்கள். அப்போது வவ்விய பாகத் தையுடைய இறைவரும் அம்பிகையும் இணைந்த செவ்வி யைக் காணுகிறோம். பின்னால் அவ்விருவரும் வேறு பிரிந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இது உலகி படைப்புக்காக எம்பெருமாட்டி செய்கிற நாடகம்.

-- ஒரு பெண்மணி கன்னியாக வீட்டுக்குள்ளே மறைந்து நின்றாள். பின்பு வீட்டு வாசலுக்கு வந்து தலையை மட்டும் காட்டினாள். கல்யாணம் ஆயிற்று. வெளியிலே கணவனுடன் வரலானாள். இதுபோலவே அம்பிகை சக்தனிடத்தில் சக்தியாக மறைந்து ஒன்றி நின்றாள். அப்பால் பாதி தன்னைக் காட்டிக் கொண்டாள். பிறகு வேறாக நின்று அவனைக் கைப்பிடித்துக் குடும்ப நிர்வா கத்தை மேற்கொண்டாள்.

முதலில், வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந் திருக்கும் செவ்வியைக் காட்ட வேண்டும் என்றார். அப்பால், உங்கள் திருமணக் கோலம் என்முன் வர வேண்டும்', என்கிறார்.

அம்பிகையின் திருவடிப் போதைத் தம் உள்ளப் பொய்கையில் மலரச் செய்தவர் இந்த ஆசிரியர். நான் என்ற அகந்தையைப் போக்கியவர். அம்பிகையின் தியானம் உள்ள இடத்தில் அகந்தை இராது. அகந்தை உள்ள இடத்தில் அவள் அருள் ஒளி இராது.

"அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும்

தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே"

என்று குமரகுருபர முனிவர் பாடுவார். எத்தனைதான் முயன்றாலும் நான் என்னும் அகங்காரமும் எனது