பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருக்கோயில்கள் Igぶ。 வெவ்வேறு நிலையில் தன் அம்ச மூர்த்திகளை எழுந்தரு ளச் செய்திருக்கிறாள். .

மூலாதாரத்தில் உள்ள கமலம், நான்கு இதழ்களை உடையது. அந்தக் கஞ்சமலரில் அம்பிகை வீற்றிருக்கிறாள் 'மூலாதாரம்புஜாரூடா என்று லலிதா சகசிரகாமம் இதைக் குறிக்கிறது. அங்கே ஐந்து திருமுகங்களோடு வீற்றிருக் கிறாள். அப்படியே ஆறு இதழ்களையுடைய ஸ்வாதிஷ் டான கமலத்தில் நான்கு முகங்களோடு விளங்குகிறாள், "ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா என்ற திருநாமம் தேவிக்கு உண்டு. பத்து இதழ்களை உடைய மணிபூரக கமலத்தில் மூன்று முகங்களுடன் இலங்குகிறாள். 'மணிபூராப்ஜ நிலயா என்பது லலிதா சகசிரகாமம். நான்காவது ஆதாரம் அநாஹதம். பன்னிரண்டு இதழ்களை உடைய இந்த மலரில் இரண்டு திருமுகங்களுடன் அம்பிகை கோயில் கொண்டிருக்கிறாள். அதனால் அவளுக்கு அநாஹதாப்ஜ நிலயா என்ற திருநாமம் உண்டாயிற்று. அடுத்ததாகிய பதினாறு தளங்களையுடைய விசுத்தி என்னும் ஆதாரகமலத்தில் ஒரு முகமும் மூன்று கண்களும் உடையவளாக வீற்றிருக்கிறாள். அதனால், விசுத்தி சக்ரநிலயா என்ற திருநாமம் அம்பிகைக்கு உரியதாக இருக்கிறது. கடைசி ஆதாரம் ஆக்ஞை. இரண்டு இத்ழ் களையுடைய இந்தக் கஞ்ச மலரில் ஆறுமுகங்களுடது எம்பிராட்டி ஒளிர்கிறாள். அதனால் ஆக்ஞாசக்ராப்ஜ நிலயா' என்ற அருமைத் திருநாமத்தை உடையவளாக இருக்கிறாள்.

இந்த ஆறு ஆதாரங்களுக்கும் மேலே இருப்பது பிரம்ம ரந்திரம். அங்கே அம்பிகை முழுத்தேசுடன் ஆயிர இதழ்க் கமலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அந்த மலருக்கு ஸ்ஹஸ்ரார பத்மம் என்று பெயர். எத்திசையிலும் உள்ள பன்முகமுடையவளாகப் பொலிகிறாள் அங்கே. 'ஸஹஸ்ரா ராம்புஜாருடா என்றும், ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா' என்றும் லலிதா சகசிரகாமம் அம்மையைப் போற்றுகிறது.