பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருக்கோயில்கள் 187°

நான்கு வேதங்களின் மூலமாகிய பிரணவமோ? அவற்றின் முடியாகிய உபநிஷத்துக்களோ? அமுதம் நிறைந்திருக்கும். வெண்மையான சந்திரனோ? தாமரை மலரோ? அடியே னுடைய நெஞ்சாகிய இடமோ? எல்லாப் பொருளும் மறைவதற்கு இடமாகிய கடலோ?

அதுவோ இதுவோ என்று கேட்டாலும் அந்த இடங் களில் எல்லாம் இருக்கிறாய் என்பதுவே கருத்து.

திருக்கோயில், திரு-கண்டார் விரும்பும் தோற்றம்:

கின்ற-சொல்கின்ற, முரசு முழங்குவதுபோல முழங்குவ தாதலின் அறைகின்ற நான்மறை என்றார். நான்மறை யின் அடியோ என்று கூட்டிப் பொருள் கொள்க. பூரணம் என்பதை அருள் நிறைவு என்றும் கொள்ளலாம்; குறை விலா நிறைவான பொருள் என்பதும் பொருந்தும். அசலம்-சலனமற்றது; மலை)

அம்பிகை இருக்கும் இடங்கள் இவை என்று கூறியது. இந்தப் பாடல், இது அபிராமி அந்தாதியில் 20-ஆவது: பாட்டு.