பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் வண்ணமும்

"பூரணாசல மங்கலையே! என்று விளித்து நிறுத்திய வடன் அம்பிகையின் மங்கலமான திருவுருவம் இந்தப் பேரன்பருடைய உள்ளத்தில் தோன்றியது. அப்படியே தியானத்தில் ஈடுபட்டார். எம்பெருமாட்டியின் திருவுரு வத்திலுள்ள அங்கங்களைக் கண்டு களித்தார். தாயாக நிற்கும் பிராட்டியினிடம் ஞான அமுதை நுகரும் பிள்ளை யாக நின்றார் அன்பர். குழந்தைக்கு அன்னையின் நகிலில் கண் போகும், அது பசித்திருப்பதனால். அப்படி ஞானதாக முடைய அன்பர் ஞான அமுது பெய்யும் தனங்களைத்

தியானித்தார். -

அவள் மங்கலமுடையவள்; நித்திய சுமங்கலி, என்றும் மாறாத மங்கலத்தை உடைய பிராட்டி. என்றும் சாவா மூவர்ப் பேராளனாகிய சிவபெருமானை நாயகனாகப் பெற்றிருத்தலின் அவளுடைய மங்கலம் என்றும் மங்காமல் இலங்குவது, அதனால் மங்கலை என்றார். 'மங்கலாக் ருதி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று மங்க லமான வடிவுடையவள் என்பது பொருள். கும்பகோணத் தில் எழுந்தருளியிருக்கும் அன்னைக்கு மங்களாம்பிகை என்பது திருநாமம். ஸாமங்கலி என்பதும் அம்பிகையின் ஆயிர நாமங்களில் ஒன்று.

அவளுடைய நகில்கள் சிவந்த கலசத்தைப்போல

உருண்டு திரண்டிருக்கின்றன. அகில லோகத்தையும்

ஈன்றும் அவள் கன்னிகையாகவே இருத்தலின் அவளுடைய தனங்கள் வடிவு குன்றாமல் உள்ளன.