பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அபிராமி அந்தாதி

அமைத்தார்கள். அவற்றில் ஒன்பது மலைமேல் இருந்தன. ஏழு கடல்களில் இருந்தன. அந்த ஒன்பது மலைகளின்மேல் வாழ்பவளாதலின் மலையாள் என்னும் பெயருடையவன் என்றும் கொள்ளலாம். .

மேரு மலயாசலமாகிய பொதியில், விந்தமலை ஆகிய மலைகளில் அம்பிகை திருக்கோயில் கொண்டிருக்கிறாள். அதனால் ஸ்-மேருமத்யச்ருங்கஸ்த்தா, மேருகிலயா, விந்த்யா சல நிவாலினி, மலயாசல வாஸினி என்ற திருநாமங்கள் அம்மைக்கு உண்டாயின. -

குழந்தையாக நின்று பார்க்கும் ஆசிரியர் கண்ணால் பார்க்கிறார்; உடனே கருத்தால் எதையோ நினைக்கிறார். முலையாள் என்று உருவத்தை எண்ணியவர் மலையாள் என்று மலைமீது கருத்தைச் செலுத்தினார். மறுபடியும் திருவுருவத்தில் கண்ணைச் செலுத்தினார். இப்போது அம்மையின் திருக்கரங்களை அவர் தியானித்தார். அவள் கையில் வளைகளை அணிந்திருக்கிறாள். அவைத் துவளத் துவள அசைகின்றன. சங்கினால் ஆன அந்த வளைகளில் பல நிற மணிகளைப் பதித்து அழகு செய்திருக்கிறார்கள். அதனால் பல வண்ணங்களை வீசுகின்றன.

வருணச் சங்கு அலை செங்கை.

இப்படி உள்ள பெருமாட்டி மிகவும் நுட்பமான கலை களின் உருவமாகவும் இருக்கிறாள். அவள் சகல கலைகளை யும் தன் கலாபமாகத் தாங்கும் மயில் போல உலவுகிறாள்.

சகல கலா மயில். -

கலை அவள் உருவம்; கலைகள் அவளால் உண்டாக்கப் :படுகின்றன: கலைகளையே அவள் தன் உரையாடலா, கொண்டிருக்கிறாள். அவள் சகலகலாவல்லியாக விளங்கு கிறாள். சதுஷ்ஷஷ்டி கலாமd, கலாவதி, கலாலாபா, கலாத்மிகள், கலாாாதா, கலாநிதி, காவ்யகலா என்று.