பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவா வரம் - . . 199

'உம்பர்கட் கரசே, ஒழிவற நிறைந்த - யோகமே, ஊற்றையேன் தனக்கு

வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே’’ என்பது திருவாசம். .

பழுத்தபடியே-பழுத்த கனியின் உருவமே என்று பொருள் கொள்வது சிறப்பு.

கொடியே, இளவஞ்சிக் கொம்பே,

எனக்கு வம்பே பழுத்த படியே?

கொடி, கொம்பு, பழுத்த படி என்றெல்லாம் சொன்னவருக்கு மலரும் மணமும் நினைவுக்கு வந்தன. அம்பிகையை மணமாகச் சொன்னால் அதனைத் தாங்கும் மலர் எது? அவள் வேகத்தின் உட்பொருளாக இருக்கிற வள்; ஆதலின் வேதம் என்னும் மலரின் பரிமளமாக இருப் பதாகச் சொல்லலாம் அல்லவா? . * .

இவ்வாறு விளங்கும் இறைவி தன் கருணையினால்

எத்தனையோ திருவிளையாடல்களைப் புரிகிறாள்; பல திருவவதாரங்களை எடுக்கிறாள். அப்படி எடுத்த அவ தாரங்களுக்குள் மிகச் சிறந்தது பார்வதியாக எழுந்தருளிய திருக்கோலம் இமராஜன் புதல்வியாக வந்து வளர்ந்து சிவ பெருமானைத் திருமணம் செய்துகொண்டாள். அதனால் ஹைமவதி, கிரிஜா, பர்வதவர்த்தனி, பார்வதி, மலைமகள் என்ற திருநாமங்கள் அப்பெருமாட்டிக்கு அமைந்தன.

மிக்க பணி அடர்ந்த பெரிய மலை இமாசலம். அதனால் அதனைப் பணிமால் இமயம் என்று சொல்கிறார் ஆசிரி 'யர். அந்த மலையில் பெண் யானையைப்போல உலாவி

வளர்ந்தாள் அம்பிகை. ஆதலின் ,