212 - - அபிராமி அந்தாதி
உள்ளே பொருளே, நினைப்பவருடைய உள்ளத்தே தம்மை. மறக்கும்படி விளைக்கும் கள்ளைப் போன்றவளே அதனால் அளிக்கின்ற களிப்பாக இருப்பவளே, இரங்குவ தற்குரிய அடியேனுக்குக் கண்ணில் மணிபோல நின்று உண்மைக் காட்சியைக் காண உதவுபவளே, அடிய்ேன் நின்னுடைய திருவுருவத்தையல்லாமல் வேறு எதையும் என் மனத்தில் தியானப் பொருளாகக் கொள்ளமாட் டேன்; நின் அன்பர்களின் கூட்டத்தை என்றும் பிரிந்து நிற்க மாட்டேன்; பிற சமயத்தை விரும்பேன்.
வியல்-விரிவு. மூவுலகு-அந்தர் மத்திய, பாதலம். உலகுக்கும் என்ற முற்றும்மை தொக்கி நின்றது. உள்ள்ே என்பதும் புற்ம்பே என்பதும் இடவாகுபெயர்கள்.1
இந்தப் பாடலோடு திருவாசகத்தில் வரும்,
கொள்ளேன் புரந்தரன் மாலயன்
வாழ்வு; குடிகெடினும் நள்ளேன் நினதடி யாரொடல் - லால், நர கம்பெறினும் எள்ளேன் திருவரு ளாலே
இருக்கப் பெறின்; இறைவா, உள்ளேன் பிறதெய்வம் உன்னைஅல்
வால்; எங்கள் உத்தமனே!"
என்னும் பாடல் ஒப்பு நோக்குவதற்குரியது,
ஒருமைப் பாட்டினால் இன்பம் விளையும் 7 P கருத்தை உடையது இந்தப் பாடல். - - -
இது அபிராமியந்தாதியில் வரும் 28-ஆவது பாடல்.