பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 . அபிராமி அந்தாதி

வெறும் பொருளுக்கே இ ந் த நிலையென்றறால், சதி சங்கத்திலே ஈடுபடுவதற்கு இன்னும் பெரிய தவம் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர் பின்னும் சிலரே என்பதில் 'ஐயம் இல்லை.

அபிராமி பட்டர் இதை நினைவாகச் சொல்லுகிறார். 'தாயே, நான் உன் அடியார்களின் பின்னே திரிந்து அவர்களை வழிபட்டுப் பிறப்பை அறுக்கும்பொருட்டு முற் பிறவிகளில் நிறைந்த தவத்தைச் செய்து அதன் பயனை அடைந்திருக்கிறேன்.

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்.

இப்போது விளைந்த விளைவைக்கொண்டு అపోGణా இதை விதைத்திருக்க வேண்டும் என்று அநுமானித்துச். சொன்னது இது. --

யாரேனும் ஒரு செல்வரிடம் பொருள் உதவி பெற வேண்டுமானால், அவருக்குப் பின்னாலே சென்று அவர் போகும் இடங்களெல்லாம் போய், அவர் உள்ளம் இரங் கச் செய்கிறான் ஏழை. யாராலேனும் ஒரு காரியம் ஆக வேண்டுமானால் அவர் பின்னே திரிந்து, காலத்தைப் பாராமல், உழைப்பைப் பாராமல், எப்படியாவது அவ ருடைய அன்பைப் பெறவேண்டுமென்று முயல்வது உலக இயல்பு. அப்படிச் சென்று திரிந்து பெறும் பொருள் சிறிது. - -

% ** 。 శిgTఖీ அடியார்களைத் தொடர்ந்து பின்பற்றுவத ன்ால் பிற்ப்பை அறுக்கும் அரிய பேறு கிடைக்கும் என்றால் என்னதான் செய்யக் கூடாது? ஒரு கண இன்பத்துக்காக மகளிர் பின்ன்ே திரிவது காமுகர் இயல்பு. தாயின்