பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழில் உதயம்
l
சமுதாய சோபை

விநாயகப் பெருமானை வணங்கிய அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியைத் தொடங்குகிறார். தொடங்கும் போது அவர் தம் உள்ளத்தில் தேவியைத் தியானம் செய்கிறார். தேவியின் அங்க எழிலையும், திருவிளை யாடல்களையும், அருட்பெருக்கையும், பிற பெருமைகளையும் விரிவாக நூறு பாடல்களால் பாடுவதாக எண்ணியே இந்த நூலைத் தொடங்கியிருக்கிறார். முதலில் எம்பெருமாட்டியின் அழகுப்பிழம்பை, சமுதாய, சோபையை, எண்ணிப் பார்க்கிறார் அவளுடைய. திருமேனித் தேசுபொலிவு பெற்றுக் காட்சி அளிக்கிறது. சூரியோதயம் ஆகும்பொழுது கீழ்வானம் வெளுத்துப் பிறகு ஒரே ஒளிப்பரப்புத் தோன்றுமே, அப்படி உள்ளம் முழுதும் பரவிய செஞ்சோதிப் பிழம்பு தோன்றுகிறது. அபிராமி அந்தாதியின் உதயத்திலே அம்பிகையின் செம்மேனிச் சுடரும் உதயமாகிறது.

அம்பிகையின் எழிலை எப்படிச் சொல்வது? இன்னபடி உள்ளது என்று சுட்டிக்காட்ட ஒண்ணாத சோதி உருவுடையவள் அவள். ஆனாலும் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் மீதுார்கின்றது. அதனால் உவமைகளின் வாயிலாகச் சொல்லத் தொடங்குகிறார்.

அம்பிகையின் உருவம் ஒரே சோதி மயம்; முழுவதும் செவ்வண்ணச் சோதி. செம்மை என்பது நம் நாட்டில்