பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அபிராமி அந்தாதி

உயிர்த்தன்மையையும், நிறைவையும், நேர்மையையும். அழகையும், சேர்த்தியால் உண்டாகும் சோபையையும் குறிக்கும் நிறம். அம்பிகை உயிருக்குயிராக, பரிபூரணப் பொருளாக, நேர்மையே உருவாக, அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவளாக, நல்லவற்றைச் சேர்த்து அருள் வழங்குபவளாக விளங்குகிறாள். அவளுடைய திதிமேனிக்கு எதை உவமை சொல்வது?

நமக்குத் தெரிந்த சோதிப் பொருள்கள் மூன்று; அக்கினி, சந்திரன், சூரியன் என்பன அவை. அவற்றில் சிறந்தது சூரியன், அதனை உவமை கூறலாம் என்று தோன்றியது. ஆனால் சூரியன் பார்க்கக் கூசும் உருவமுடையவன் அல்லவா? அம்பிகையோ தன்னை உபாசிப்பவர்களின் அகக்கண்ணில் கூசுதலைப் போக்கும் எழிலுடன் காட்சி தருபவளாயிற்றே! கதிரவன் உதயமாகும் பொழுது எல்லோரும் காணும்படி இருப்பான். ஒளியும். எழிலும் பொருந்திய உதய சூரியனை உவமையாகச் சொல்லலாம். லலிதா சகசிரநாமத்திலும் அந்த உவமை உண்டு. "உத்யத்பானு ஸஹஸ்ராபா என்று வருகிறதல்லவா?

இந்த எண்ணங்களின் - முதிர்வாக அபிராமி அந்தாதியின் முதல் தொடர் உதயமாகிவிட்டது.

உதிக்கின்ற செங்கதிர்


உதய சூரியன் உலகின் இருளை ஒட்டுவதுபோல அம்பிகை அஞ்ஞான இருளை ஒட்டுகிறாள். சூரியன் உதயமானவுடன் நடுக்கத்தைத் தரும் பனி அகன்று போகிறது; அம்பிகையின் காட்சியினால் நடுக்கத்தைத் தரும் தாபத்திரயங்கள் ஒழிகின்றன. தாமரைகள் செங்கதிரவன் உதயமாகும்போது விரிகின்றன; அம்பிகை,