பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அபிராமி அந்தாதி

துாரம் நடப்பவர் காலுக்குச் செருப்புத் துணை. வெயிலில் நடப்பவருக்குக் குடை துணை. ஆற்றைக் கடப்பவருக்கு ஒடம் துணை. போர் புரிபவனுக்கு படைக்கலம் துணை. சட்டி பானை வனைபவர்களுக்குத் தண்ட சக்கரங்கள் துணை. இவை யாவும் ஜடப்பொருள்கள். பால் வேண்டி நிற்பாருக்குப் பசுத்துணை. இராக்காவல் வேண்டுமானால் நாய் துணை. நெடுந்துாரம் போகக் குதிரை துணை. இவை யாவும் உயிருடைய ஜீவன்கள். குழந்தைக்குத் தாய் துணை; தகப்பனும் துணை. மனைவிக்குக் கணவன் துணை. குடிகளுக்கு மன்னன் துணை. இவர்கள் மனிதர்கள். இந்த மூவகைத் துணைகளும் பொதுவாக மனிதனுடைய உடம்பைப் பாதுகாக்கவும் அதைக் கொண்டு நல்வாழ்வு வாழவும் உதவி புரிகின்றன.

உடம்பு, உள்ளம், உயிர் என்ற மூன்றில் ஒன்றை. விட ஒன்று சிறந்தது. உள்ளத்தில் கலக்கம் வந்தாலும் அச்சம் வந்தாலும் பாதுகாத்து நலம் செய்யும் துணைவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களும் ஞான குருக்களும் உள்ளத்துக்குத் துணையாக இருக்கிறார்கள். உடம்புக்குத் துணையாக நிற்பவர்களைவிட உள்ளத்துக்குத் துணையாக நிற்பவர்கள் சிறந்தவர்கள், உடம்பைவிட உள்ளம் சிறந்தது. ஆகையால். அதுபோலவே உயிருக்குத் துணையாக யாரேனும் இருந்தால் அவர்கள் எல்லாத் துணைவர்களையும்விட மேலானவர்கள் என்று உறுதியாகக் கூறலாம். அவர் யார்?

நம்முடைய உயிர் உடலில் இருக்கிறது. உயிரும் உடலும் சேர்ந்தே மனிதன் ஆகிறான். உயிருள்ள உடம்பைப் பிறப்பித்தவர்கள் தாயும் தந்தையும். அவர்கள் இந்த உயிருக்குத் துணையாவார்களா என்று பார்த்தால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். காலன் உயிரைக் கொண்டு போகும்போது தாய். தந்தையர் அதைக் காப்பாற்ற இயலாது. ஆருயிர்க்