பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அபிராமி அந்தாதி

உடம்புக்கும் உள்ளத்துக்குங்கூட அவளே துணையாக நின்று அருள் பாலிக்கிறாள். உடம்பின் ஆதாரங்களில் பல உருவங்களாக நின்று பாலிக்கிறாள். உள்ளமாகிய புண்டரீகத்திலே வீற்றிருந்து இயக்குகிறாள். உயிருக்குயிராகி நலம் செய்கிறாள். அதனால் அவளே விழுத்துணை. அவள் ஒருத்தியே விழுமிய துணை; வேறு யாருமில்லை. இந்தக் கருத்தினால் தான்,

அபிராமி என்றன் விழுத்துணையே

என்று பாடிப் பாட்டை நிறைவேற்றி மனநிறைவு பெறுகிறார் அபிராமிபட்டர்.