பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அபிராமி அந்தாதி

சொல்லும் போதெல்லாம் அது பராசக்தியையே குறிக்கும் அவளே தயையின் பிழம்பு. அவளுடைய அருட்பெருக்கே அங்கங்கே ஆறு போலவும் கால்வாய் போலவும் ஓடுகிறது.இதை உணர்ந்தே அம்பிகையின் சகசிரநாமம் எடுத்தவுடன் அவளை, "ஸ்ரீமாதா” என்று துதிக்கத் தொடங்குகின்றது. அந்தத் திருத்தாய் உலகுக்கெல்லாம் தாய். அவளிடமுள்ள அகடிதகடனா சாமர்த்தியங்கள் பலவா னாலும் எல்லாவற்றினும் சிறந்ததாக நிற்பதும் ஆத்மாக்களுக்குப் பயன் படுவதும் அருள். அந்த அருளின் நிலையம் தான் என்பதை அறிவுறுத்தவே அவள் பெண்மைக்கோலத்தில் தாயாக விளங்குகிறாள்.

அவளுடைய பெருமைகள் பலவற்றையும் தெரிந்து கொண்டாலும் அவள் அருள் நிரம்பிய தாயாக நிற்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் ஒரு பயனும் இல்லை. அதனால்தான் சகசிர நாமம் எல்லா நாமங்களுக் கும் முதலாக "ஸ்ரீமாதா” என்பதை வைத்துப் போற்றுகிறது.

அது மாத்திரம் அன்று. ஆயிர நாமங்களையும் சொல்லப்புகுந்த ஒருவன் இடையிலே தடைப்பட்டு நிற்கிறான். சொன்ன அளவுக்கு அவனுக்குப் பயன் உண்டு. முதல் நாமத்தைச் சொன்னாலே போதும்; எது உயிராக நிற்கிறதோ அதைத் தெரிந்து கொண்டவனாகிறான். அதற்கு ஏற்ற வகையில் இருப்பது அந்தத் திருநாமம். -

இவற்றையெல்லாம் எண்ணிய அபிராமிபட்டர் அவளைத் துணையென்று சொல்லுவதோடு நிறைவு பெறவில்லை; உயர்ந்த துணையென்பதைக் காட்ட, "தொழுந் தெய்வம்" என்றார். அப்போதும் அவர் திருப்தி அடையவில்லை. அவ்யாஜமான கருணையுடையவள் அவள் என்