இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சம்பிரதாய விரோதமும், பிழையும் இந்த விளக்கங்களில் இருத்தல் கூடும். இந்தத் துறையில் புகுந்து நலம்பெற்ற பெரியவர்கள் அவற்றை எடுத்துக் காட்டினால். அவற்றைத் தெரிந்து கொண்டு திருத்தம் செய்து பயன் அடைவேன்.
இந்த விளக்கங்களைச் 'சங்கரகிருபா' வில் வெளியிடுவதற்கு ஆசி கூறியருளிய ஸ்ரீ சிருங்ககிரி ஜகத்குரு ஸ்ரீமத் சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்களுடைய திருவடியைச் சிந்தித்து வந்திக்கின்றேன். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ கே. ஆர். வேங்கடராமையரவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கி.வா.ஜகந்நாதன்
காந்தமலை சென்னை-28