பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முக்கரண வழிபாடு 67.


விடுவோம். திருவடியோடு தொடர்பு கொள்வதனால் தான் அடியார் என்ற பெயரே உண்டாயிற்று. -

宪 家 冰

முதலில் அன்னையின் திருவடித் தாமரையில் விழுந்து வணங்கி அப்பெருமாட்டியின் மந்திரத்தைத் தியானிக்க வேண்டும். யார் தன்னை மனத்தால் நினைக்கிறார்களோ, அவருடைய பாவத்தை நீக்குவது என்னும் பொருளை உடையது மந்திரம் என்னும் சொல். வாயினால் மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்வது மரபன்று. நாவை இயக்கிச் சொன்னாலும் புறத்தே புலனாகாமல் சொல்ல வேண்டும்.


       "ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி 
        நாவியல் மருங்கின் நவிலப் பாட"


என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சொல்கிறார்.

மந்திரங்களை மூன்று வகையாக ஜபிக்கலாம். வெளிப் படையாகப் பிறர் காதில் விழும்படி சொல்வதை வாசிகம் என்பர். மந்திரத்தின் முழு வடிவம் தெரியாமல் மெல்ல இரகசியமாகச் சொல்லுதலை மந்தம் என்பர். மனத்துள் தியானிப்பதை மானஸம் என்பர். இந்த மூன்று முறைகளிலும் ஒன்றைவிட ஒன்று சிறந்தது. மிகச்சிறந்ததாகிய மானஸமே பெரியோர் விரும்புவது.

அம்மையின் மந்திரத்தை இடைவிடாமல் தம் சிந்தையிலே நிலைபெறச் செய்து தியானிக்கும் செயலையுடையவர் இந்த அன்பர்.


              சிந்தையுள்ளே 
          மன்னியது உன் திருமந்திர 

அம்பிகையின் மந்திரங்கள் பலவகைப்படும். ஏகாக்ஷரி, நவாக்ஷரி,பஞ்சதசாக்ஷரி,சோடசாக்ஷரி என்று வெவ்வேறு