74
அபிராமி அந்தாதி
பிறவிக்குக் காரணமாக இருக்கின்றன. ஆனால் அவை: ஜடம், ஜடத்துக்குத் தானே இயங்கும் ஆற்றல் இல்லை. அந்த வினைகளைக் காரணமாகக் கொண்டு எம்பெருமாட்டியே உயிர்களுக்கு இன்பதுன்பங்களை ஊட்டுகிறாள். மத்தைப் பானையிலிட்டுக் கடைகிற பெண்ணைப் போல் விளங்குகிறாள், எம்பிராட்டி குதித்துச் சுழன்று வரும் மத்துப்போல் உயிர் பிரபஞ்சத்தில் அநுபவங்களைப் பெறுகிறது.
. தயிர் உடைந்து வெண்ணெய் திரண்டு மோரிலே ஒட்டாமல் மிதக்கும் பக்குவம் வந்தால் பெண்மணி கடை வதை நிறுத்தி விடுகிறாள். பிரபஞ்சத்தோடு ஒன்றி நின்ற: அநுபவம் நீங்கி, ஒன்றியும் ஒன்றாத முக்த நிலையில் பெறும் அநுபவமாகிய நவநீதம் தோன்றி விட்டால் உயிரும் செயலொழிந்து நிற்கிறது.
இப்போது தயிர் கடையும் மத்தைப் போலச் சுழன்று. சுழன்று தவிக்கிறது உயிர். 'என்னுடைய உயிர் தயிரில் நின்று சுழலும் மத்தைப்போலச் சுழலுகிறது; அதனால், தளர்ச்சி அடைகிறது. இந்தத் தளர்ச்சி இல்லாததாகிய கதியை அடையும் வண்ணம் நீ நின் திருவுள்ளத்தில் எண்ணியருள வேண்டும்' என்று பிரார்த்திக்கிறார் இந்தப் பேரன்பர். -
ததி உறு மத்திற் சுழலும் என்
ஆவி தளர்வு இலதோர்
கதி உறு வண்ணம் கருதுகண்டாய்.
(ததி-தயிர். மத்தின்-மத்தைப்போல.)
தயிர் கடைகிற பெருமாட்டி அம்பிகை. கைவளை குலுங்கத் திருமேனி அசையத் திருவிழி கயிற்றோடு செல்ல.அம்பிகை கடைகிறாள். ஆம்! உயிர்க்கூட்டங்கள்