பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


“குமரன், அதோ பார்த்தாயா? மரக்கிளையில் ஒரு முயல் குட்டி! நீ இதுவரை முயல் குட்டி மரமேறிப் பார்த்ததுண்டா?” என்று மாதவன் கேட்டார்! “காலங் கெட்டுவிட்டது” என்றார்.

“கொலம் கெடவில்லை; உங்கள் கண் தான் கெட்டுவிட்டது! கண்களைக் கசக்கிக் கொண்டு நன்றாகப் பாருங்கள்!” என்றார் குமரன்.

முருகனும் மாதவனும் உற்றுப் பார்த்தனர்.

“உண்மையில் மரக்கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தது முயலல்ல; ஒரு வெள்ளைப் பூனைக் குட்டி!”

அந்தப் பூனைக் குட்டி எழுந்து நின்று அவர்களைப் பார்த்து ‘மியாவ்’ என்றது.

“நாங்கள் சரியான அறிவிலிகள்!” என்று கூறிச் சிரித்துக் கொண்டே தயிர்ச் சோற்றுப் பொட்டலத்தைப் பிரித்தனர்.

இரண்டு பொட்டலங்களை மூன்று பேரும் பங்கு போட்டுக் கொண்டனர்.

அந்த முயல் வேட்டையை நினைத்துப் பார்த்தால் இன்றைக்கும் அவர்களுக்குச் சிரிப்பு வருகிறது!