இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33
மீது ஏறிப் பார்த்தது. புல்வெளி முன்னைப் போலவே இருந்தது. புல் அனைத்தும் தள தள வென்று காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.
முயலுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
நல்ல வேளை! கனவுதான் கண்டேன். இல்லா விட்டால்--என் முட்டாள் தனமான சாபம் நிறைவேறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!
கடவுளே! என்னைப் போன்ற மூடர்களின் சாபம் பலிக்காமல் செய்யும் உனக்கு ஆயிரம் நன்றி! ஆயிரம் வணக்கம்!
இவ்வாறு கூறிக் கொண்டே முயல் புல் வெளியை நோக்கித் தாவிப் பாய்ந்து ஓடியது.