பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75


பத்து அடிக்கு ஒரு கரும்பாக, யானை இருக்கும் இடம் வரையில் போட்டுக் கொண்டே சென்றன.

யானை பார்க்குமுன் புதர் மறைவில் ஓடி மறைந்து கொண்டன.

காட்டில் உலாவிக் கொண்டிருந்த யானையின் கண்ணில் தரையில் கிடந்த கரும்பு தெரிந்தது.உடனே அது ஓடி வந்து அதை எடுத்தது. துதிக்கையால் வளைத்து அப்படியே வாய்க்குள் செலுத்தியது. கடித்துக் கடித்துத் தின்றது.

சற்று தள்ளிக் கிடந்த கரும்பைப் பார்த்தது. ஒடி வந்து இழுத்துக் கடித்துத் தின்றது.

இன்னும் சற்று தொலைவில் கிடந்த கரும்பை இழுத்துக் கடித்தது.

இப்படியாக ஒவ்வொரு கரும்பாகத் தின்று கொண்டே, பள்ளத்தின் அருகில் வந்து விட்டது. பள்ளத்தின் எதிரில் குவியலாகக் கிடந்த கரும்புகளைப் பார்த்தவுடன் யானை விரைவாக நடந்தது. அப்படி நடந்து செல்லும்போது, பள்ளத்தின் வழியாகச் சென்றது. பள்ளத்தின் குறுக்காகப் பரப்பியிருந்த கரும்பு களின் மேல் அது காலடி யெடுத்து வைத்தவுடன், யானையின் பளுவைத் தாங்காமல், கரும்புகள் ஒடிந்து யானை பள்ளத்திற்குள் விழுந்து விட்டது.

பள்ளம் ஒடுக்கமாகவும் ஆழமாகவும் இருந்ததால், அந்தக் காட்டு யானையால் அசையவோ, நகரவோ, மேலேறவோ முடியவில்லை.