விழுந்த அதிர்ச்சியில் அது பிளிறிய பிளிறல் காடெங்கும் எதிரொலித்தது.
"எங்களைத் தூக்கி எறிந்து துன்பப் படுத்தினாயே, இப்போது எப்படியிருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே ஷான் நாட்டு முயல் வெளியே வந்தது.
"பாவம் யானையாரை இப்போது யார் காப்பாற்றுவார்கள்!" என்று கேட்டது இரங்கூன் முயல்.
அப்போது ஏதோ புதுவிதமான ஒலி கேட்டது இரண்டு முயல்குட்டிகளும் திடுக்கிட்டுத் திரும்பின.
இரண்டு சரக்குப் பேருந்துகளும் ஒரு சிறிய உந்தும் அந்தக் காட்டுக்குள் வந்து நின்றன. அவற்றிலிருந்து பதினைந்து மனிதர்கள் இறங்கினார்கள்.
அவர்களில் ஒருவன் யானை பள்ளத்தில் விழுந்து தத்தளிப்பதைப் பார்த்து விட்டான்.
"தலைவரே, யானை பிடிக்க வந்தோம். இதோ பிடிபட்டே யானை கிடைத்திருக்கிறது"
என்றான்.
"நம் வேலை எளிதாகி விட்டது" என்று கூறிக் கொண்டே தலைவர் யானையை நோக்கி நடந்தார்.
பிறகு அவருடைய கட்டளைப்படி சில ஆட்கள் யானையைக் கயிற்றால் கட்டினார்கள். சரக்குப் பேருந்து ஒன்றின் மீது இருந்த சுழல் தூக்கியால் யானையை அப்படியே மேலே தூக்கினார்கள். சுழல்