பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அப்பர் தேவார அமுது

வாழும் நிலையான வீடு ஒன்று உண்டு என்பதை அறிந்து கொள்வதில்லை. அப்படி ஒன்று இருக்கிறதென்று பெரிய வர்கள் சொன்னல் அதை நம்புவதில்லை.

ஞானம் பெற்றவர்கள் இந்த உடம்பாகிய வீடு நிலையா தது என்பதை உணர்ந்து நிலையான வீடாகிய முத்தியைப் பெற முயல்வார்கள். இறைவன் திருவருளால் அத்தகைய நெறியில் நிற்கும் நல்லறிவு அவர்களுக்கு உண்டாகும்.

"ஒருபூ தரும்அறி யாத்தனி வீட்டில்உரை

உணர்வு அற்று இருபூத வீட்டில் இராமல்என்ருன்’

என்று அருணகிரியார் பாடுகிருர். அந்தத் தனி வீட்டிலே புகும் முயற்சியே பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் என்று வெவ்வேறு வகையாக இருக்கும்.

மெய்யறிவுடையவர்கள், இந்த ஆபாசக் கொட்டிலில் இருக்க வேண்டியிருக்கிறதே! என்ற அருவருப்போடிருப் பார்கள். “அருவருக்கும் உலக வ ழ் வு’ என்று குமரகுருபரர் பாடுகிருர் ஆல்ை பெரும்பாலோர் இந்த உடம்பிலே மோகம் கொண்டு, இதல்ை பெறும் சிற்றின் பமே இன்பம் எனக் கொண்டு வாழ்கிருர்கள். முன் வினைக்கு ஏற்றபடி இந்த உடம்பைக் கொடுத்த மறைக்காடருைக்கு இதில் வாழ்ந்து, இதன் குறைபாடுகளை நன்கு அறிந்து, நிலை யான வீட்டில் வாழ வேண்டும் என்று முயன்று, அதை அடை யச் செய்ய வேண்டும் என்பதே திருவுள்ளம். ஆல்ை இந்த உடம்பாகிய குடிசையின் இழிவை எண்ணுமல் உயிரானது இதிலே ஆசை வைத்து மயங்கி வாழ்கிறது. இறைவர் செய் யும் திருவிளையாடல் இது. -