பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனத்தே வைத்தேன் 35.

கொண்டிருத்தலால் எய்ப்பு வந்தாலும், அல்லற்படாமல் அந்த வைப்புப் பயன்படும் என்பது குறிப்பு. "எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே" (பெரியாழ்வார் திருமொழி) என்பது போன்றது. இது.]

தேவாரத்தில் நான்காம் திருமுறையில் ஏழாம் திருப்பதிகத்தில் உள்ள முதற்பாட்டு இது. -