பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அப்பர் தேவார அமுது

அதை உரித்து அந்தத் தோலைப் போர்த்துக் கொண்டார். பூவேலை செய்த பட்டும் பீதாம்பரமும் அவருக்குக் கிடைக்கவில்லையா? யானையைக் கொன்றது போகட்டும். இரத்தம் சிந்தும் அதன் தோலைப் போர்த்துக் கொள்ள வேண்டுமா? அது பார்க்க எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது!

கால் ஓர் கழல்ர் :
வேயுடன் ஆடு தோளியவள் விம்ம வெய்ய மழு
வீசி வேழ உரி போர்த்து.

இந்த லட்சணத்தோடு அவர் ஆடுகிறார். ஆடும்போது அவருடைய திருமேனியில் அழகான பொருள் ஒன்றேனும் தோற்றுகிறதா? அவர்தாம் ஆடுகிறாரே; அவருடைய தேவியாகிய உமாதேவி அதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். "இந்தக்கோலத்தோடு நீங்கள் ஆடவேண்டாம். நல்ல கோலம் புனைந்து ஆடுங்கள்" என்று அவள் சொல்லக் கூடாதோ? அவளும் அந்த ஆட்டத்தைக் கண்டு மகிழ்கிறாள் போலும்! ஏ! இது என்ன அழகு?

கணவர் அப்படி இருந்தால் அவரைத் திருத்தி நல்லபடி அணிகளை அணிந்து கொள்ளும்படி செய்யக் கூடாதோ? அவர் ஆடுகிறார். அவள் கண்டு களிக்கிறாள். இதுதான் இந்தத் தம்பதிகளுக்கு இயல்போ? நன்றாக இருக்கிறது இந்தக் கோலமும் ஆட்டமும்! அதைப் பார்த்து நாலு பேர் சிரிப்பார்களே என்று அவளாவது எண்ணித் தடுக்கவில்லை. "நான் ஆடுகிறேன். நீ பார்த்து மகிழ்' என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் போலும்! இவர்கள் இயல்பே இதுதானோ?

ஏ இவர் ஆடுமாறும் இவள் காணுமாறும் !
இதுதான் இவர்க்கு ஓர் இயல்பே ?

தம் கணவர் அணியும் ஆடையும் பூண்டு அழகுடன் விளங்க அவர் அருகில் தாமும் அணிகளோடும் ஆடைகளோடும் அலங்காரமாக நின்று களிப்பது உலகப்பெண்களின்