உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 119

பேரரசனாக மூடிசூட்டினான். ஆனால், விரைவில் ஹொய்சளர் படையெடுப்பினால் அவன் ஆட்சி கவிழ்ந்தது. அவன் படையெடுப்பினால் அவன் ஆட்சி கவிழ்ந்தது. அவன் உமா என்ற பாண்டிய இளவரசியை மணம் செய்திருந்தான்.

வீரராகவன் என்ற அரசன் 1320-ல் சிறிய கிறிஸ்துவ சமூகத்தினருக்குக் கோட்டயம் பட்டயங்களை அளித்தான். 15ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வென்ற மண்கொண்ட பூதலன் என்ற நான்காம் வீரவர்மனும் அந்நூற்றாண்டிறுதியில் (1595-1607) ஐந்தாம் இரவிவர்மாவும் ஆட்சி செய்தனர்.

18-ஆம் நூற்றாண்டில் வேணாடு பல சிற்றரசுகளாகப் பிளவுபட்டிருந்தது. திருவிதாங்கூர் அரசர் தென்கோடியை மட்டும் ஆண்டனர். மார்த்தாண்டவர்மன் என்ற அரசன் இன்றைய திருவிதாங்கூர் எல்லை முழுவதையும் வென்று ஆண்டான்.

திப்பு சுல்தானை எதிர்த்தும் பாஞ்சாலங்குறிச்சிக் கிளர்ச்சியை எதிர்த்தும் திருவிதாங்கூர் அரசர் ஆங்கில வாணிகக்கழக ஆட்சியாளர்க்குச் செய்த உதவிகாரணமாக அவ்வரசு அவர்களின் நேசநாடு ஆயிற்று.


மைசூர் அரசுகள்

மைசூரில் ஹொய்சளர் ஆட்சி முடிவுற்றபின் 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஒரு சிற்றரசு தோன்றிற்று. விசயநகரப் பேரரசின் கீழ் இருந்த தலைவர்களை எதிர்த்து அம்மரபில் வந்த நான்காம் சாமராசன் தன் எல்லையைப் பெருக்கிக் கொண்டான். இராசாதிராசன் (1578-1617) சீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றி மைசூர் இராச மரபின் முதல்வனானன்.

இரண்டாம் தொட்ட கிருஷ்ணன் காலத்தில் (1713-1731) தேவராசன் என்ற தளவாய் எட்டாம் சாமராசன் மூன்றாம் மும்மடி கிருஷ்ணன் ஆகியவர்களை அரசனாக்கி ஆட்டி வைத்தான்.

1716-இல் படைத் தலைவன் ஹைதர் அலி வலியமைற்ற ஆட்சியினைத் தன்வயப்படுத்தி ஆண்டான். அவன் ஆட்சியில் மைசூர் கிட்டத்தட்ட ஒரு பேரரசு என்ற நிலையில் வளர்ந்தது. ஆங்கிலேயர்களும் மற்றச் சிற்றரசர்களும் அவன் பெயர் கேட்டு