தென்னாடு 133
கண்டு அதனுள் அகவிடுதலையைக் குழைத்த பாரதியாரைப் போல, அகவிடுதலைக் கனவுகண்டு அதில் புதிய நாட்டு விடுதலையாகிய புற விடுதலையைக் குழைத்துத் தந்துள்ளார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
நாடு என்ற சொல் பண்டு மிகக் குறுகிய ஒரு சிறிய எல்லையையே குறித்தது. நாடு கடந்து பண்பாடு மட்டுமே வளர்ந்தது. ஆனால், அரசியல் எல்லை பண்பாட்டெல்லையை எட்டிப்பிடிக்குந்தோறும் நாடு என்ற சொல்லும் விரிந்த எல்லையைக் குறித்தது. பறம்புநாடு, எய்மாநாடு என்பவை பாரி முதலிய வேளிர் ஆண்ட எல்லையைக் குறித்தன. சேரநாடு, சோழ நாடு, பாண்டிநாடு என்பன அரசர் நீடித்து ஆண்ட எல்லையாயின. இந்த எல்லைகளும் வரவர விரிவுற்றன. ஆனால், மொழி எல்லையில் வந்தபின் நாட்டெல்லையின் வளர்ச்சியில் ஒரு புது மாறுதல் ஏற்பட்டது. புற எல்லை விரிவையிட அக எல்லையின் ஆழம் மிகுதி ஆற்றல் தரும் என்ற உண்மை உணரப்பட்டது. ஆகவே மொழி எல்லையில் நின்று நாடுகள் தம் எல்லையுட்பட்ட மக்கள் வாழ்வின் உயர்வு தாழ்வுகளை வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்ட வலு நாடிற்று. ஒவ்வொரு நாடும் அகலுலக ஒற்றுமைக்கு அடிப்படையான உறுதியான ஒரு தளமாக வளர்ந்தது.
மொழி கடந்த ஒற்றுமை அருமையானது; ஆனால், அது முடியாத ஒன்றல்ல. அது மொழியின் தன்னாட்சி அடிப்படையான கூட்டுறவாட்சியாய் இருக்கவேண்டும். அத்துடன் சரிசமத்துவமும் நேசமும் உடையதாய் உறுப்பினரின் மனமார்ந்த தங்குதடையற்ற விருப்பத்தின் மீதமைந்ததாய் இருக்கவேண்டும். இத்தகைய மொழி கடந்த கூட்டரசின் ஒற்றுமை, உலக ஒற்றுமைக்கு அடிகோலுவதாய் அமையும்.
இன்றைய உலகம் மொழி கடந்து, இனம் கடந்து, எல்லைக் கோடுகள் கடந்து பண்பாட்டில் வேகமாக முன்னேறி வருகிறது. ஆயினும் மொழிமீது மொழி ஆட்சி செய்கிறது, மொழிக்கு மொழி உயர்வு தாழ்வு இருக்கின்றது. அதேநிலை இனங்களுக்