பிறமொழி இலக்கிய விருந்து -1
145
காமந்: (தனக்குள்) இலவந்திகை திறமே திறம்! நாமே கூறவந்ததை அவள் கூற வைத்துவிடுகிறாள். (உரக்க) விதர்ப்ப நாட்டின் அமைச்சர் தேவரதனைப்பற்றி நீ கேள்விப்பட் டிருக்கலாம். அவர் வீரருள் வீரர். அறிவருள் தலைசிறந்த அறிவர். ஒப்பற்ற பண்பாளர்.
மால: ஆ, என் தந்தை அவரைப்பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறார்.
தோழர்களாகக்கூட
இல: ஆம். இருவரும் பள்ளித் தோழர்க
இருந்தவர்களாம்.
காமந்: மலையில் பிறந்த மாணிக்கம்போல், அவர் குடியின் புகழ் பெருக்கவந்த செல்வன்தான் என் மாதவன்.
மால: (தன்னையறியாமல்) ஆ!
இல: மாணிக்கம் மலையிற் பிறக்கிறதானால்...
அவலோ: முத்து கடலில்தானே பிறக்கும்?
(மாலைச்சங்கு கேட்கிறது)
காமந்: மாலைச்சங்கு ஊதிவிட்டது. பின் ஒரு தடவை வருகிறேன். இப்போது நாங்கள் போகிறோம்.
(காமந்தகியும் அவலோகிதாவும் மாடிப்படியிறங்கிச்
செல்கின்றனர்.)
காட்சி 5
(சிவன்கோயில் பின்பக்கத்துத் தோட்டம்: அவலோகிதாவும் அவள் தோழி புத்தரட்சிதாவும்)
புத்த: என்ன அக்கா, அறநிலையத்திலேயே உன் கால்கள் இப்போதெல்லாம் பாவமாட்டேனென்கிறதே!
அவலோ: அன்னை இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி வெளியே வேலை கொடுக்கிறாள். அதனால்தான் நிலையத்தில் அடிக்கடி தங்கியிருக்க முடிகிறதில்லை.
புத்த: இப்போது எங்கே இப்பக்கம்?