பிறமொழி இலக்கிய விருந்து -1
205
விபரமனைத்தையும் கூறி, இங்கே அழைத்து வாருங்கள். ஒரு முறை நேரில் பார்த்து நானும் விடை பெற்றுக் கொள்ளுகிறேன்” என்றான். இணக்க மனமுடைய குங்சாவ் இதற்கு ஒப்பினாள். சிங்சேனிடம் முத்துமாலையைக் காட்டிச் செய்தி கூறியபோது, அவள் “இது பித்துக்கொள்ளித்தனம்" என்று கூறிக் குங்சாவின் அறியாமையைக் கண்டு நகைத்தாள். துறவியர் எப்படிக் காதல் செய்தியை வெளியிடுவது என்று மறுத்தாள். அத்துடன் அந்த முத்து மாலையை அவள் மாடத்தின் மீது வீசியெறிந்துவிட்டு, தாச்சிங் மனைவி யிடம் செய்தி கூறியதாகவும், அவள் அழைப்பிற்கிணங்கி வர மறுத்து விட்டதாகவும் அவனிடம் கூறிவிடும்படி அறிவுரையும் கூறி அவளை அனுப்பிவிட்டாள். தாச்சிங்கும் இது கேட்டு ஒருவாறு மனைவி பற்றிய சிந்தனையை மறந்து, இன்ப வாழ்விலே முழு மனமும் செலுத்திவிட்டான்.
புத்தர்பிரான் அருள் திருவிளையாடல்களுடன் போட்டி யிட்டு அவன் காதல் திருவிளையாடல்களில் பகலும் இரவும், வேனிலும் கோடையும் போக்கிச் சில மாதங்கள் கழித்தான்.
- தகாக் காதல் கவர்ச்சியுடையதாயிருக்கலாம். ஆனால் அதன் இன்பம் எத்தனை நாள் நீடிக்கும்? குடும்பக் காதலின் நிறை இன்ப அமைதியும் நலமும் அதில் எப்படி இருக்க முடியும்? விரைவில் தாச்சிங் உடல் தளர்ந்தது. நரம்புகள் தெறிக்கத் தொடங்கின. முதலில் பெண்டிர்கள் இதனை அவன் நடிப்பு நயம் என்று கருதினர். ஆனால் விரைவில் அவன் கைகால்கள் ஓய்ந்தன. வாத பித்த சிலேத்தும நோய்கள் உடலில் கருக்கொண்டு வளர்ந்தன. உடலெல்லாம் புண்பட்டு அணுகுபவர் அருவருக்கும்படியாக நெடியும் சீழும் வடிந்தன. பெண்டிர்கள் அவன் தம் இன்ப வேட்டையால் இந்நிலை ஏற்றான் என்பதறிந்து, தாயர்கள் போல் அவனைப் பேணினர். விரைவில் உடல் குணம் அடையும் என்று ஆறுதல் கூறினர். ஆனால்... ஒருநாள் இரவு, தாச்சிங் உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டது. உ
மடத் தலைவியரிருவரும் உண்மையிலேயே கொண்ட மனைவி யரினும் பன்மடங்கு தம் இறந்த காதலனுக்காக விக்கி விக்கி அழுதனர். பணிப் பெண்கள் கண்ணீர் வடித்துக் கதறினர். ஆனால் உடலை என்ன செய்வது என்பது பற்றிய கவலை