உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

231

ஃவில்ச்: (தனக்குள்) ஆ, காரியம் தலை நீட்டிக்கொண்டு வருகிறது, இப்போதுதான்! விழிப்பாயிருக்கவேண்டும்!

திருமதி பீச்: நீ மாக்ஹீத்தை அடிக்கடி பார்க்கிறாயே! பாலி அவருடன் எப்படிபழகுகிறாள்?

ஃவில்ச்: ஒரு குடும்பப் பெண் ஆணுடன் பழகுவது போலத்தான் பழகுகிறாள்.

திருமதி பீச்: ஏண்டா, நன்றிகெட்ட பயலே! நான் கேட்பதென்ன, நீ பசப்புவதென்ன?

ஃவில்ச்: நான் சொல்லமுடியாதம்மா! செல்வி பாலியிடம் சொல்ல மாட்டேனென்று உறுதி கூறியிருக்கிறேன்.

திருமதி பீச்: என்னிடம் நீ உண்மையாய் இருக்க வேண்டாமா?

ஃவில்ச்: செல்வி பாலியிடம் உண்மையாயிருப்பதைக் கெடுத்தா? மேலும் சொல்லிவிட்டு நான் செல்வி பாலியிடம் படாதபாடு படவேண்டும்.

திருமதி பீச்: வா, என் அறைக்கு வந்து சொல்லு. திரு, பீச்ச முக்குக்கூடத் தெரியாமல், எனக்கென்று நான் வைத்திருக்கும் உயர்ந்த வகுப்புத் தேறல் ஒரு கிண்ணி தருகிறேன். உண்மையை ஒளியாமல் சொல்லு.

ஃவில்ச்: ஆகா, தேறல் தந்தால், கூறுகிறேன்.

திருமதி பீச்: சரி, வா, உள்ளே போய்விடுவோம். பாலி இதோ வருகிறாள், அவள் வருமுன் போய்விடுவோம்.

(போகிறார்கள். பாலி பாடிக்கொண்டே வருகிறாள்)

பாலி:

(பாட்டு)

கன்னியர்களே- உலகில் நன் மலர்களே!

எழி லார்ந்த பொழி லிடையே வன்ன மலர் உண்டு;

(கன்)